29 C
Colombo
Friday, September 20, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

அரச பணியில் சேர்ந்த இளைஞனைக் கடத்தி திருமணம் செய்து வைத்த மர்ம கும்பல்

இந்தியாவின் பீஹாரில், அரசுப்பணியில் உள்ள இளைஞர்களை கடத்தி கட்டாய திருமணம் செய்து வைக்கும் சம்பவங்கள் அடிக்கடி இடம்பெற்று வருகிறது.

அந்த வகையில், பீஹாரின் வைஷாலி மாவட்டத்தை சேர்ந்த கவுதம் குமார் எனபவர் பீஹார் பொது சேவை துறை தேர்வில் தேர்ச்சி பெற்று அரசு பாடசாலை ஆசிரியராக பணியில் சேர்ந்தார். அவருக்கு அரசு வேலை கிடைத்த 24 மணி நேரத்தில் பாடசாலைக்கு வந்த 4 பேர் கும்பல் அவரை வலுக்கட்டாயமாக அழைத்து சென்றனர்.

செங்கல் சூளை அதிபரான ராஜேஷ் ராய் என்பவரின் ஆட்கள் தான் கடத்தலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜேஷ் ராய், துப்பாக்கி முனையில் வைத்து, தனது மகள் சாந்தினிக்கு தாலி கட்டுமாறு மிரட்டி உள்ளார்.

அதில் பயந்து போன கவுதம் குமார் தாலி கட்டி உள்ளார். சம்பவம் குறித்து பொலிஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதன் பேரில் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles