அம்பாறை நிந்தவூரில், போக்குவரத்து விதிமுறைகளை மீறி, அதிவேகமாக ரேஸ் ஓடிய இளைஞர்கள், வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகினர்.
வேகக்கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிள் நிந்தவூர் பெரிய ஜும்ஆ பள்ளிவாசல் சுவர்ப் பகுதியில் மோதியே விபத்துச் சம்பவித்துள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த இளைஞர்கள், நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நிந்தவூர் பொலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.