மின் கட்டண குறைப்பு தொடர்பில் அடுத்த வாரம் தீர்மானிக்கப்படும்

0
159
மின்சாரக் கட்டணக் குறைப்பு தொடர்பான தீர்மானம் எதிர்வரும் வாரத்தில் இலங்கை மின்சார சபைக்கு வழங்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.மின்சாரக் கட்டணக் குறைப்பு தொடர்பான முன்மொழிவை CEB நேற்று PUCSL க்கு சமர்ப்பித்ததாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.பிரேரணையை ஆராய்ந்து, தரவுகளின் உண்மைச் சரிபார்ப்பின் பின்னர், அடுத்த வாரத்திற்குள் CEBக்கு பரிந்துரைகளை வழங்குவதாக PUCSL தெரிவித்துள்ளது.கடந்த ஒக்டோபர் மாதம் அதிகரிக்கப்பட்ட மின் கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர அண்மையில் தெரிவித்திருந்தார்.மத வழிபாட்டுத் தலங்கள், அரசு அலுவலகங்கள், சுற்றுலா விடுதிகள் ஆகியவற்றுக்கான உயர்த்தப்பட்ட மின் கட்டணம் அதே அளவு குறைக்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.