கோட்டாபய ராஜபக்ஷ நாட்டிற்கு துரோகமிழைத்தார் – முருத்தெட்டுவே ஆனந்த தேரர்

0
83

அதிகூடிய வாக்குகளால் தெரிவான முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நாட்டிற்கு துரோகமிழைத்தார் எனவும், அவரிடம் நிர்வாகத் திறமை இருக்கவில்லை எனவும், மேல் மாகாண பிரதம சங்கநாயக்க தேரரும், கொழும்பு பல்கலைக்கழக வேந்தருமான முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

மிகப் பெரும்பான்மை வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நாட்டிற்கும் மக்களுக்கும் துரோகமிழைத்தார்.

கோட்டாபயவிடம் நிர்வாகத் திறமை இருக்கவில்லை.

தனக்கு யாரால் நன்மை கிடைக்கும் என கருதினாரோ, அவர்களையே, கோட்டாபய தன்னை சுற்றிவைத்திருந்தார்.

கோட்டாபய தவறான பாதையில் செல்கின்றார் என, நாங்கள் பல தடவை அவரிடம் தெரிவித்தோம்.

அதன் காரணமாகவே அவர் வீழ்ச்சியடைந்தார்.

நாங்கள் இன்று எதிர்கொள்ளும் நிலைமைக்கு, அவரின் நிர்வாகத்திறன் இன்மையே காரணம். என முருத்தெட்டுவே ஆனந்த தேரர் குறிப்பிட்டுள்ளார்.