சர்வதேச நாணய நிதிய இலக்குகளை பூர்த்தி செய்வதன் மூலம், இலங்கையின் பொருளாதாரத்தை புதுப்பிக்க, 16 அம்ச செயற்திட்டத்தை செயற்படுத்த, சர்வதேச நாணய நிதியம் தீர்மானித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள், ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி சாகல ரத்நாயக்க, நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க உட்பட, வங்கிகளின் தலைவர்களுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அத்துடன், வெளிப்படையான அரச இயந்திரமொன்றை ஸ்தாபிப்பது உட்பட, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவை பலப்படுத்துவதை முதற்கட்டமாக செயற்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இலங்கை சார்பில், 14 அம்சக் கோரிக்கைகளை நடைமுறைப்படுத்த ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளதுடன், ஏனைய இரண்டு அம்சக் கோரிக்கைகளையும், படிப்படியாக அமல்படுத்துவதற்கு ஒப்புக்கொண்டுள்ளது.
இலங்கை சுங்கம், உள்நாட்டு இறைவரித் திணைக்களம் போன்றவற்றில் இடம்பெறும், ஊழல் மோசடிகளை நிறுத்துவதற்கான செயன்முறை நிர்ணயிக்கப்பட்ட பின்னர், இவ்விரு விடயங்களையும் நிறைவு செய்வதே, அரசாங்கத்தின் நோக்கமாகும் என, அதிகாரிகளால் சுட்டிக்காட்டப்பட்டது.