ஈரானில் பாதுகாப்பு படையினர்-பயங்கரவாதிகள் இடையிலான மோதலில் 28 பேர் பலி

0
81

ஈரானின் 2ஆவது மிகப்பெரிய மாகாணமான சிஸ்டன்-பாலுசெஸ்தானிலுள்ள ராஸ்க், சர்பாஸ் மற்றும் சாஹ்பஹார் ஆகிய நகரங்களில் இராணுவ சோதனை சாவடிகள் மற்றும் கடலோர காவல் நிலையம் மீது நேற்று முன்தினம் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர்.

ஒரே சமயத்தில் பல இடங்களில் பயங்கரவாதிகள் நடத்திய இந்த தாக்குதல்களால் பாதுகாப்பு படையினர் நிலைகுலைந்தனர். அவர்கள் பதில் தாக்குதல் நடத்துவதற்குள் பயங்கரவாதிகள் பொதுமக்கள் பலரை பணயக் கைதிகளாக பிடித்து வைத்தனர்.

இதை தொடர்ந்து கூடுதல் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு பணய கைதிகளை மீட்பதற்கான முயற்சியின் போது பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது.

இதில் 18 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டு, பணய கைதிகள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். எனினும் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் பாதுகாப்பு படையினர் 10 பேர் பலியாகினர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு உடனடியாக எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை