6,000 மாணவர்களுக்கு புலமைப்பரிசில்!

0
73

2022/2023 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்த பொருளாதார சிரமங்களுக்கு முகங்கொடுக்கும் 6,000 மாணவர்களுக்கு புலமைப் பரிசில் வழங்கும் பணிகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கான நிலுவைத் தொகையுடன் மே மாதம் முதல் குறித்த புலமைப்பரிசில் தொகை வழங்கப்படும் என ஜனாதிபதி நிதியம் அறிவித்துள்ளது.

அத்துடன், தெரிவுசெய்யப்பட்ட அனைத்து மாணவர்களுக்கும் மார்ச் முதல் மாதாந்தம் 6,000 ரூபாய் வீதம் 24 தவணைகளுக்கு குறித்த புலமைப்பரிசில் தொகை வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இதற்காக தெரிவு செய்யப்பட்ட மாணவர்களின் பட்டியல் ஜனாதிபதி நிதியத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் (www.presidentsfund.gov.lk) வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.