அம்பாறை அக்கரைப்பற்று அருள்மிகு ஸ்ரீ சித்திவிநாயகர் மகாதேவஸ்தான பெரியபிள்ளையாரின் வரலாற்றை கொண்டதான கருங்கொடித்தீவு பெரியபிள்ளையார் கும்மிப்பாடல் நூல் வெளியீட்டு விழா நேற்றிரவு நடைபெற்றது.
ஸ்ரீ சித்திவிநாயப்பெருமானின் மகோற்வச திருவிழா நடைபெற்று வரும் வேளையில் முன்னாள் ஆசிரிய ஆலோசகர் சபாநாயகி யோகராசாவினால் இந்நூல் எழுதப்பட்டு வெளியீடு செய்யப்பட்டது.
ஆலயத்தின் தலைவர் மு.குழந்தை வடிவேலின் தலைமையில் நிகழ்வு இடம்பெற்றது.
நூலாசிரியரினால் நூலின் முதற் பிரதி, அதிதிகளுக்கு வழங்கப்பட்டு மாணவர்களினால் கும்பிப் பாடல் பாடப்பட்டது. அருளாளராக சுவாமி நித்தியானந்தா சரஸ்வதி மகராஜ், பிரதம அதிதியாக, அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்
வி.ஜெகதீசன், விசேட அதிதியாக ஆலையடிவேம்பு பிரதேசசெயலாளர் த.கஜேந்திரன், அருளாசி வழங்குபவராக ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சண்முகம் வசந்தன் குருக்கள் என பலரும் கலந்துகொண்டதோடு, அதிதிகள் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.