ஓ.எம்.பி அலுவலகத்தினால் இதுவரை 5 ஆயிரத்து 555 விசாரணைகள் பூர்த்தி

0
69

காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தினால் இதுவரையில் 5ஆயிரத்து 555 விசாரணைகள் பூர்த்திசெய்யப்பட்டுள்ள நிலையில், இவற்றில் சுமார் 4200 விண்ணப்பங்கள் இடைக்கால நிவாரணத்திற்காக, இழப்பீட்டுக்கான அலுவலகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் உறுப்பினர் ரூபராஜா தெரிவித்தார்.

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தில் இன்றைய தினம் காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. கிழக்கு மாகாணத்தில் காணாமல்ஆக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டைப்பெற்றக்கொடுக்கும் வகையில் தொடர்ச்சியான விசாரணைகள்
முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. இதன்கீழ் இன்றைய தினம் மண்முனைப் பற்று,மண்முனை தென் மேற்கு பட்டிப்பளை,போரதீவுப்பற்று,களுவாஞ்சிகுடி ஆகிய பிரதேச செயலகப்பிரிவுகளை உள்ளடக்கியதாக களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் உறுப்பினர் ரூபராஜா தலைமையிலான அதிகாரிகள் மற்றும் களுவாஞ்சிகுடி பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் இணைந்து இந்த விசாரணைகளை முன்னெடுத்தனர். இதன்போது விசாரணைக்காக அழைக்கப்பட்டவர்களது விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டதுடன் அது தொடர்பான விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டன.