மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து, இன்று ஆரம்பமாகியுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு 13ஆயிரத்து 902 பரீட்சார்த்திகள் தோற்றுகின்றனர்.
மட்டக்களப்பு மாவட்டத்திற்குட்பட்ட 5 கல்வி வலயங்களிலும் 111 பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இப் பரீட்சை நிலையங்களை இணைக்கும் வகையில் 14 பரீட்சை மத்திய நிலையங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் சுஜாதா குலேந்திரகுமார் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை பாடசாலை பரீட்சார்த்திகளாக 10ஆயிரத்து 37பேரும் தனிப்பட்ட பரீட்சார்த்திகளாக 3ஆயிரத்து 65பேரும் தோற்றுவதுடன் இவர்களில் தமிழ் மொழியில் 13ஆயிரத்து 826 பேரும், சிங்கள மொழியில் 10 பேரும் ஆங்கில மொழியில் 66 பேரும் தோற்றுகின்றனர். இன்றைய தினம் கா.பொ.த.சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் ஆலயங்களில் வழிபாடுகளில் ஈடுபட்டதை தொடர்ந்து பெற்றோரின் ஆசிர்வாதகங்களைப் பெற்று பரீட்சை மண்டபங்களுக்குச் சென்றதை காணமுடிந்தது.