ஐ.பி.எல் , ரி 20 கிரிக்கெட் தொடரில் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் பிளே ஓவ் சுற்றின் எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் – ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
சஞ்சு சம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி ஒரு கட்டத்தில் லீக்சுற்றை முதலிடத்துடன் நிறைவு செய்யும் சூழ்நிலையில் இருந்தது. ஆனால் தொடர்ச்சியான 4 தோல்விகள் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான கடைசி லீக் ஆட்டம் மழை காரணமாக இரத்தானமை ஆகியவற்றால் லீக் சுற்றில் 3-வது இடத்தை பிடித்தது.
மறுபுறம் டு பிளெஸ்ஸிஸ் தலைமையிலான ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூரு அணி லீக் சுற்றின் முதல் 8 போட்டிகளில் 7-ல் தோல்வி அடைந்த நிலையில் அதன் பின்னர் போராட்ட குணத்துடன் செயல்பட்டு கடைசி லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வெளியேற்றி பிளே ஓவ் சுற்றில் கடைசிஅணியாக கால்பதித்தது.
இன்றைய போட்டியில் தோல்வியை சந்திக்கும் அணி தொடரில் இருந்து வெளியேறும். அதேவேளையில் வெற்றி பெறும் அணி வரும் 24-ம் திகதி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் தகுதி சுற்று 2-ல் விளையாடும். இதில் வெற்றி பெறும் அணியே இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.