‘தூய அரசியலுக்காக ஒன்றிணைவோம்’ முல்லைத்தீவில் மக்கள் மேடை நிகழ்வு!

0
63

மார்ச் 12 அமைப்பினரால், தூய அரசியலுக்காக ஒன்றிணைவோம் எனும் தொனிப் பொருளில் முல்லைத்தீவில் மக்கள் மேடை எனும் நிகழ்வு நேற்று நடாத்தப்பட்டது.
நாடாளுமன்ற உறுப்பினர், மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல் பிரதிநிதிகள் அடங்கலாக அரசியல் பிரமுகர்களையும் மக்களையும் ஒன்றினைக்கும் மக்கள் மேடை நிகழ்வு, நாடெங்கும் மார்ச் 12 அமைப்பினரால் நடாத்தப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் 22 ஆவது மாவட்டமாக முல்லைத்தீவு மாவட்டத்திலும் அரசியல் பிரமுகர்களையும் மக்களையும் ஒன்றிணைக்கும் மக்கள் மேடையொன்று நேற்று இலங்கை செஞ்சிலுவை சங்க மண்டபத்தில் நடைபெற்றது.
குறித்த மக்கள் மேடை நிகழ்ச்சியில் கட்சிகளின் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.