பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பாக ஜனாதிபதியுடன் கலந்துரையாட தயார் – வடிவேல் சுரேஷ்

0
67

1700 ரூபாய் சம்பளத்தை வழங்க உடன்படாத பெருந்தோட்டக் கம்பனிகளின் குத்தகையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உடனடியாக இரத்து செய்யவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

தொழில் அமைச்சின் செயலாளரின் தலைமையில், இன்று தொழில் அமைச்சில் சம்பளப் பிரச்சினைக்கான தீர்வை வழங்கும் விடயம் தொடர்பிலான கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கலந்துரையாடலுக்கு முதலாளிமார் சம்மேளனம் வருகை தராமையினால் குறித்த கலந்துரையாடல் தோல்வியில் நிறைவடைந்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ்.