பதுளை பிரதேசத்தில் பசறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட டெமேரியா பீ தோட்ட பகுதியிலிருந்து நேற்று (17) ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் 50 வயதுடையவர் எனவும் 5 அடி உயரமுடையவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவர் சாம்பல் நிற காற்சட்டை ஒன்றை அணிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சடலமானது பதுளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.