“உறுமய” தேசிய செயற்றிட்டத்தின் கீழ் பதுளை மாவட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இலவச காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று மஹியங்கனை பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
20 இலட்சம் நிரந்தர காணி உறுதிப் பத்திரங்களை வழங்கும் உறுமய திட்டத்தின் கீழ் பதுளை மாவட்டத்தில் முதற்கட்டமாக தகுதி பெற்ற 65,393 பேரில் 662 பேருக்கு இலவச காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டன.