ஜூலை மாதம் இறுதிப் பகுதியில் ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்புக்கான திகதி: தேர்தல்கள் ஆணைக்குழு விசேட அறிவிப்பு

0
127

ஜூலை மாதம் இறுதிப் பகுதியில் ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்புக்கான திகதி உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் குறித்து தெளிவுபடுத்தலுக்காக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஏற்பாடு செய்துள்ள விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அத்துடன் அரசியலமைப்பின் ஏற்பாடுகள் மற்றும் ஜனாதிபதி தேர்தல் சட்டம் என்பனவற்றுக்கு அமையவே நாங்கள் செயற்படுவோம் எனவும் தேர்தலை நடத்துவதற்கு தடையேதும் கிடையாதெனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் குறிப்பிட்டார்.

இதேவேளை, செப்டம்பர் மாதம் 17 ஆம் திகதிக்கு பின்னர் ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்பு நடத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்கு இம்முறை 76 ஆயிரம் புதிய வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.