நடு வீதியில் கவிழ்ந்த லொறி

0
67

தெற்கு அதிவேக வீதியின் பின்னதுவ நுழைவாயிலுக்கு அருகில் இன்று (05) காலை லொறியொன்று வீதியின் நடுவில் கவிழ்ந்துள்ளதாக பின்னதுவ பொலிஸார் தெரிவித்துள்ள்ளனர்.

கடுவெலயிலிருந்து மாத்தறை நோக்கி பயணித்த லொறியின் பின்பக்க ரயர்கள் வெடித்து விபத்துக்குள்ளானதில் லொறி வீதியின் நடுவில் கவிழ்ந்துள்ளது.

குறித்த சம்பவம் காரணமாக மாத்தறை நோக்கி பயணித்த வாகனங்களுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாத்தறை நோக்கி கார்கள் மாத்திரமே பயணிக்க முடியும் எனவும் பஸ் மற்றும் லொறிகள் பின்னதுவைக்குள் நுழைவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

லொறியை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், விபத்தில் எவருக்கும் பெரிய காயங்கள் ஏற்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.