28 C
Colombo
Friday, September 20, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

தமிழ் அரசுக் கட்சி சசிகலா ரவிராஜ் உள்ளிட்ட குழுவினர் ரணிலுடன் சந்திப்பு

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட சசிகலா ரவிராஜ் உள்ளிட்ட குழுவினரும், ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவை நேற்று யாழ்ப்பாணத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

குறித்த சந்திப்பு யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

சந்திப்பில் அகிலன் முத்துக்குமாரசாமி, முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்களான எஸ்.மயூரன், எஸ்.சுதர்சன், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவின் மகன் கலையமுதன், எஸ்.குணாளன் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது பிரதேச அபிவிருத்தி தொடர்பில் விரிவான பேச்சில் ஈடுபட்டதாகவும் விசேடமாக சாவகச்சேரியை தனியான பிரதேச செயலக பிரிவாக பிரிப்பது தொடர்பான கோரிக்கை மனுவை சமர்ப்பித்திருந்ததாகவும் சசிகலா ரவிராஜ் தெரிவித்துள்ளார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles