ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் சார்பில் பொது வேட்பாளராக போட்டியிடும் பா.அரியநேத்திரனுக்கு வாக்களிக்குமாறு, தமிழ்நாட்டில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக செயற்பட்டுவரும் ஈழத் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு அறைகூவல் விடுத்துள்ளது.
இது தொடர்பில் ஈழத் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரும் திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவருமான கொளத்தூர் தா.செ.மணி விடுத்துள்ள அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.