32 C
Colombo
Friday, October 18, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

மன்னாரில் தமிழரசுக் கட்சி தேர்தல் அலுவலகம் திறந்து வைப்பு

நாடாளுமன்ற தேர்தலுக்கான தமிழரசு கட்சியின் மன்னார் மாவட்டத்திற்கான பிரதான கட்சி அலுவலகம் நேற்று மாலை, மன்னார் தாழ்வுபாடு பிரதான வீதியில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. தமிழரசு கட்சி வேட்பாளர் சட்டத்தரணி செல்வராஜ் டினேஸனால் அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது.

மன்னார் மாவட்ட தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுக்கவும், கட்சி சார்ந்த தேர்தல் செயற்பாடுகளை முன்னெடுக்கவும் குறித்த காரியாலயம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.இதேவேளை தமிழரசு கட்சியின் இளைஞர்களுக்கான கூட்டமும் மன்னார் தனியார் விடுதியில் இடம்பெற்றது.

மன்னார் மாவட்டத்தில் உள்ள தேவன்பிட்டி, வட்டகண்டல், வெள்ளிமலை, சாந்திபுரம், தலைமன்னார், பேசாலை, முருங்கள் உள்ளடங்களாக பல கிராமங்களை சேர்ந்த இளைஞர்கள் குறித்த ஒன்றுகூடலுக்கு வருகை தந்து தங்களது ஆதரவை வெளிப்படுத்தியிருந்தனர்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிவமோகன் நிகழ்வில் கலந்து கொண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஆதரவை வேட்பாளர் சட்டத்தரணி செல்வராஜ் டினேஸனுக்கு வழங்கியிருந்தார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles