அமெரிக்காவில் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி 3 பேர் உயிரிழந்துள்ளனர்.அமெரிக்காவில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில், 3 பேர் உயிரிழந்துள்ளனர்.அமெரிக்காவின் மிசிசிபி மாகாணம் ஹொல்மெஸ் நகரில் பாடசாலைகளுக்கிடையேயான கால்பந்து போட்டியில் அப்பகுதியை சேர்ந்த பாடசாலை சாம்பியனை வென்றது.
இந்த வெற்றியை கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சிக்கு வருகைதந்த இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன், 8 பேர் படுகாயமடைந்துள்ளதாக, சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. சம்பவம் தொடர்பாக அந்நாட்டு பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.