சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, மட்டக்களப்பில் விழிப்புணர்வு ஊர்வலம்

0
42

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினமான இன்று, ‘உள்ளடங்கிய மற்றும் நிலையான எதிர்காலத்திற்காக மாற்றுத்திறனாளிகளின் தலைமைத்துவத்தினை விரிவுபடுத்தல்’ என்னும் தொனிப்பொருளில் மட்டக்களப்பில் விழிப்புணர்வு நிகழ்வுகள் நடைபெற்றன.

கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களமும் மட்டக்களப்பு மாவட்ட செயலகமும், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் சம்மேளனமும் இணைந்து
மட்டக்களப்பு இந்துக்கல்லூரி மைதானத்திலிருந்து, ‘உனது நலனுக்காக தீர்மானம் எடுப்பதில் உனக்காக நான் துணை நிற்பேன்’ என்னும் தொனிப்பொருளில்
விழிப்புணர்வு ஊர்வலமொன்றை ஏற்பாடு செய்திருந்தன.

மட்டக்களப்பு மாநகரசபை மண்டபம் வரையில் இந்த ஊர்வலம் வருகைதந்ததுடன் அங்கு சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்வுகள்
சிறப்பாக நடைபெற்றன.

மாவட்ட மாற்றுத்திறனாளிகள் சம்மேளனத்தின் தலைவர் எஸ்.அருள்ராஜா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்ரினா முரளிதரன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளர் பொறியியலாளர் என்.சிவலிங்கம் பங்கேற்றார். மாற்றுத்திறனாளிகளாகயிருந்து சாதனை படைத்தவர்கள் கௌரவிக்கப்பட்டதுடன் மாற்றுத்திறனாளி மாணவர்களும்
கௌரவிக்கப்பட்டனர்.