கொஹுவலை பிரதேசத்தில், பாடசாலை மாணவர் ஒருவரின் பணப்பையை திருடிய நபர் பொது மக்களால் கற்களால் தாக்கப்பட்டு தப்பி ஓடியதையடுத்து பின்னர் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச் சம்பவம் சனிக்கிழமை (15) இடம்பெற்றுள்ளது.
சனிக்கிழமை, கொஹுவலை பிரதேசத்தில் பாடசாலை மாணவர் ஒருவரை கூரிய ஆயுதத்தை காட்டி அச்சுறுத்தி மாணவரின் பணப்பையை பறித்து சென்ற நபர் பொது மக்களால் கற்களால் தாக்கப்பட்டு தப்பி ஓடியுள்ளார்.
பின்னர் குறித்த நபரின் சடலம் நுகேகொட, நலந்தாராம வீதியில் நடைபாதை பாதைக்கு அருகில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவரின் தலையின் பின்புறம் மற்றும் காதுக்கு அருகில் காயங்கள் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படாத நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொஹுவலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.