வத்தளை, கதிரான பாலத்திற்கு அருகில் 7 கிராம் 100 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த முச்சக்கரவண்டியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வத்தளை பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.
சந்தேக நபர் பயணித்த முச்சக்கரவண்டி கடந்த 4 ஆம் திகதி வத்தளை பகுதியில் வைத்து திருடப்பட்டது என பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். …….