கடந்த 5 மாதங்களில் சுமார் 2 தொன் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
எதிர்வரும் 26 ஆம் திகதி சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம் தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்றபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதேவேளை, புதிய அரசாங்கம் 23.09.2024 அன்று ஆட்சிக்கு வந்ததிலிருந்து இன்று வரை மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் சோதனைகள் குறித்து பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய கருத்து வௌியிட்டார்.
அதற்கமைய, இதுவரையான காலப்பகுதியில் 1,253 கிலோகிராம் ஹெராயின், 2,121 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள், 12,439 கிலோகிராம் கஞ்சா, 22 கிலோகிராம் கொக்கேய்ன், 1.6 மில்லியன் போதை மாத்திரைகள் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டன.