குஷ் போதைப்பொருளுடன் இந்திய பிரஜை கட்டுநாயக்கவில் கைது

0
9

கட்டுநாயக்க விமான நிலையத்தில் “குஷ்” போதைப்பொருளுடன் இந்திய பிரஜை ஒருவர் விமான நிலைய சுங்க அதிகாரிகளால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டவர் 38 வயதுடைய இந்திய பிரஜை ஒருவர் ஆவார்.

சந்தேக நபர் நேற்று இரவு 10.47 மணியளவில் இந்தியாவின் சென்னை நகரத்தில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

இதன்போது விமான நிலைய சுங்க அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர் கொண்டு வந்த பயணப்பொதியில் இருந்து 2 கிலோ 130 கிராம் “குஷ்” போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மொத்த மதிப்பு 2 கோடியே 13 இலட்சம் ரூபா ஆகும்.

கைது செய்யப்பட்ட இந்திய பிரஜையையும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருளையும் மேலதிக விசாரணைக்காக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.