மணல் கடத்தலில் ஈடுபட்ட டிப்பர் வாகனமொன்றை பருத்தித்துறை பொலிஸார் அதிரடியாக மடக்கி பிடித்த சம்பவம் வெள்ளிக்கிழமை (11) இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம், வல்லிபுரம் பகுதியில் இருந்து சட்டவிரோதமாக மணலை ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம், மந்திகை சந்தி அருகே பொலிஸார் வழிமறித்தபோது நிற்காமல் தொடர்ந்து சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து டிப்பரை துரத்திச் சென்ற பொலிஸார், வாகனத்தின் டயரின் மீது ஆணிக்கட்டைகளை வீசியுள்ளனர். இதனால் டயரின் காற்று வெளியேறியதால் வாகனத்தை இயக்க முடியாமல் போயுள்ளது.
பின்னர், வாகனத்தை வீதியில் கைவிட்டுவிட்டு தப்பியோட முயன்ற சாரதியை, பொலிஸார் விரைந்துசென்று மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.
கைதுசெய்யப்பட்ட நபர், டிப்பர் வாகனத்துடன் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.