அம்பலாங்கொடை நகர சபைத் தவிசாளருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் குறித்த நகர சபை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
தொற்று உறுதி செய்யப்பட்ட நகர சபை தவிசாளர் ஐ.டி.எச். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் கம்பளை நகரிலுள்ள காப்புறுதி நிறுவனம் ஒன்றின் ஊழியர்களுக்கு மேற்கொண்ட அன்ரிஜென் பரிசோதனையில் 22 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்களுடன் தொடர்பிலிருந்த 30 குடும்பங்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
இலங்கையில் இதுவரையில் 103,487 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்களுள் 94,856 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.