மட்டக்களப்பு இருதயபுரம் பகுதியில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞர் நேற்றிரவு 11 மணியளவில் மட்டக்களப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று அதிகாலை 4 மணியளவில் சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில், உயிரிழந்தவர் இருதயபுரம் 8 ஆம் குறுக்கு பகுதியைச் சேர்ந்த 21 வயதான சன்முகம் விதுசன் என்பவரே உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, கைது செய்யும் போது குறித்த இளைஞரைப் பலமாகத் தாக்கிய பொலிஸார் அடித்துக் கொலை செய்துள்ளதாக உயிரிழந்த இளைஞனின் உறவினர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.