27.8 C
Colombo
Saturday, September 21, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

மட்டக்களப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இளைஞன் திடீர் மரணம்

மட்டக்களப்பு இருதயபுரம் பகுதியில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞர் நேற்றிரவு 11 மணியளவில் மட்டக்களப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று அதிகாலை 4 மணியளவில் சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில், உயிரிழந்தவர் இருதயபுரம் 8 ஆம் குறுக்கு பகுதியைச் சேர்ந்த 21 வயதான சன்முகம் விதுசன் என்பவரே உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, கைது செய்யும் போது குறித்த இளைஞரைப் பலமாகத் தாக்கிய பொலிஸார் அடித்துக் கொலை செய்துள்ளதாக உயிரிழந்த இளைஞனின் உறவினர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles