சர்வதேச மகளிர் தினத்தை துக்க தினமாக பிரகடனப்படுத்தி, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் முல்லைத்தீவு மாவட்டத்தில் போராட்டமொன்று இன்று காலை முன்னெடுக்கப்பட்டது.போராட்டத்தில் பங்கேற்றவர்கள் கறுப்பு நிற ஆடைகளை அணிந்து தமது கோரிக்கைகளை முன்வைத்தனர்.
2017ஆண்டு மார்ச் மாதம் 8 ஆம் திகதி, 2009ஆம் ஆண்டு இறுதி யுத்தகாலத்திலும், யுத்தம் நிறைவடைந்த பின்னரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளைத் தேடி கவனயீர்ப்புப் போராட்டம் மற்றும் உணவு தவிர்ப்புப் போராட்டமொன்றையும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் ஆரம்பித்திருந்தனர்.
இந்தப் போராட்டம் பின்னர் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டமாக மாறி, முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு
முன்பாக கொட்டகையொன்று அமைக்கப்பட்டு, போராட்டத்தை தொடர்ந்தனர்.போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு இன்றோடு 5 வருடங்கள் நிறைவடைகின்ற போதிலும், அவர்களுக்கான நீதி இன்னும் கிட்டவில்லை. தமது போராட்டம் ஆரம்பித்து 5 வருடங்கள் நிறைவடைந்ததை உறவுகள் இன்று நினைவுகூர்ந்ததோடு, சர்வதேச சமூகம் நீதி வழங்க வேண்டும் எனவும் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தனர்.
Home முக்கிய செய்திகள் சர்வதேச மகளிர் தினத்தை துக்க தினமாக பிரகடனப்படுத்தி முல்லைத்தீவில் போராட்டம்!