பாடசாலை மாணவர்கள் கல்விச் சுற்றுலா சென்ற பேருந்து விபத்துக்குள்ளானது!

0
251

பாடசாலை மாணவர்கள் கல்விச் சுற்றுலா சென்ற பேருந்து ஒன்று, வலஸ்முல்ல – ஹந்துகல – ஹிங்குருவத்த பகுதியில் விபத்துக்குள்ளானதில், 15 இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
நேற்றிரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதன்போது காயமடைந்த 15 இற்கும் மேற்பட்டோரும், வலஸ்முல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில், நால்வரின் நிலை கவலைக்கிடமானதாக உள்ளதாக காவல்துறை குறிப்பிட்டுள்ளது.
மாத்தறை – கட்டுவன தேசிய பாடசாலையில் இருந்து, ஹந்துகல – நியதகல பிரதேசத்திற்கு கல்விச் சுற்றுலாவுக்காக பயணித்த பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
சாரதியால், பேருந்தின் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போனமையே விபத்துக்கான காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக காவல்துறை குறிப்பிட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.