கிழக்குப் பல்கலைக்கழகம் – வந்தாறுமூலை மாணவர்கள் உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் உயிர்நீத்த உறவுகளின் நினைவஞ்சலி செலுத்தினார்.
கட்ந்த 2019 உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடைபெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் உயிர்நீத்த உறவுகளின் மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி இன்று பல்கலைக்கழக வளாகத்தின் முன் இடம்பெற்றது.
கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார பீட மாணவர் ஒன்றியத்தின் ஏற்ப்பாட்டில் இவ் அஞ்சலி நிகழ்வு ஏற்பாடு இடம்பெற்றது.
குண்டுத்தாக்குதலில் பலியான உறவுகளை நினைவு கூர்ந்து மலர் தூவி தீபம் ஏற்றி 2நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர்.