31 C
Colombo
Saturday, July 27, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

O/L மாணவி துஷ்பிரயோகம் – குற்றவாளிக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை!

சுமார் 10 வருடங்களுக்கு முன்னர், பாடசாலை சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட வாடகை வாகன சாரதிக்கு கொழும்பு மேல் நீதிமன்றினால் 10 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

தனது வீட்டிற்கு அருகிலுள்ள வாடகை வீடொன்றில் வசித்து வந்த சாதாரண தர பரீட்சைக்கு தயாராகிக்கொண்டிருந்த சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக தற்போது 35 வயதுதாகும் குறித்த நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெந்திகே தீர்ப்பை வழங்கியுள்ளார்.

இது தவிர, குற்றவாளிக்கு 10,000 ரூபாய் அபராதம் விதித்த நீதிபதி, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 50,000 ரூபாய் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார்.

இழப்பீடு வழங்காவிட்டால் அபராதத் தொகையாக வசூலிக்கப்படும் என்றும், அதையும் செலுத்தாவிட்டால் மேலும் 2 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles