அனைத்து கட்சிகளுக்கும், நியாயமான பிரதிநிதித்துவம் வழங்குவதே, எமது நோக்கம் : ஜனாதிபதி!

0
162

அனைத்து கட்சிகளுக்கும், நியாயமான பிரதிநிதித்துவத்துடன் கூடிய ஆட்சிக் கட்டமைப்பை தயாரிப்பதே, தமது நோக்கம் என, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில், பல தரப்பினருடன், நேற்று பிற்பகல், ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, ஜனாதிபதி இதனைத் தெரிவித்ததாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு, அறிக்கை வெளியிட்டுள்ளது.
தேசிய பேரவையை ஸ்தாபிப்பதே, பிரதான இலக்கு என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதற்கு சகல கட்சிகளின் பிரதிநிதித்துவமும் அவசியம் என வலியுறுத்தினார்.
குழு அமைப்பை பிரதிநிதித்துவப்படுத்துவதா அல்லது அரசாங்கத்துடன் இணைவதா என்பதை, அந்தந்த தரப்பினர் கலந்துரையாடி தீர்மானித்ததன் பின்னர், தமக்கு அறிவிக்குமாறும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கோரிக்கை விடுத்துள்ளார்.