அம்பாறை கல்முனை கல்வி வலயத்திலிருந்து, அதிபர் சேவைக்குள்வாங்கப்பட்ட 55 பேருக்கு, அதிபர் நியமனங்கள் வழங்கப்பட்டன.
கல்முனை வலயக்கல்வி பணிப்பாளர் எம்.எஸ்.சாஹூல் நஜீம் தலைமையில், கல்முனை வலயக் கல்வி கேட்போர் கூடத்தில் வைத்து நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன.
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பணிப்புரையின் பேரிலும் மாகாண கல்விச் செயலாளர் திசநாயக்கவின் வழிகாட்டலின் கீழும் நியமனங்கள்
வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.