அம்பாறை சம்மாந்துiயில், கட்டட நிர்மாண வேலைகளுக்காகக் கொண்டுவரப்பட்ட, மணலில் இருந்து கைக்குண்டொன்று நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளது. நிர்மாணப் பணிகளில் ஈடுபடுபவர்கள், 119 என்ற பொலிஸ் அவசர பிரிவுக்கு வழங்கி தகவலையடுத்து, சம்பவ இடத்திற்குச் சென்ற சம்மாந்துறைப் பொலிஸார் கைக்குண்டை மீட்டனர்.
குண்டு செயலிழக்கும் பிரிவினர், தடயவியல் பொலிஸ் பிரிவினரும் சம்பவ இடத்திற்கு வருகை தந்து, விசாரணைகளையும், பரிசோதனைகளையும் முன்னெடுத்தனர். சம்மாந்துறைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.