அம்பாறையில் மத்ரஸா பாடசாiலை மாணவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், கைது செய்யப்பட்ட மௌலவியின் விளக்கமறியல் பெப்ரவரி 1ம் திகதி வரை
நீடிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம், கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம்.சம்சுதீன் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட நிலையில்,
பாதிக்கபட்ட தரப்பினர் சார்பாக ஆஜரான சட்டத்தரணிகள் உட்பட ஏனைய தரப்பினரின் விடயங்களை ஆராய்ந்த நீதிவான்
சந்தேக நபரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
வழக்கினை சாய்ந்தமருது பொலிஸ் நிலைய நீதிமன்ற உத்தியோகத்தர் முபாறக் நெறிப்படுத்தி இருந்தார்.
சம்பவ தினமன்று மத்ரஸாவில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.ரி.வி கமெராவில் சேமிக்கப்பட்டிருந்த காணொளிகள் சந்தேக நபரான மௌலவியின் உத்தரவின் பேரில் அழிக்கப்பட்ட
நிலையில் கடந்த நீதிமன்ற தவணைகளில் பொலிஸாரினால் அவ்விடயம் மன்றின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டிருந்தது.
நீதிவான் அரச இரசாயண பகுப்பாய்விற்கு அனுப்பி அழிக்கப்பட்டதாக கூறப்படும் காணொளிகளை மீண்டும் பெற்றுக்கொள்வதற்காக மொரட்டுவை பல்கலைக்கழகத்திற்கு
அனுப்பி அறிக்கையை பெற்றுக்கொள்ளுமாறு உத்தரவு பிறப்பித்திருந்தார்.
நேற்றையதினம் மன்றில் அழிக்கப்பட்ட காணொளிகள் மீட்கப்பட்டுள்ளதாக மன்றிற்கு அறிவிக்கப்பட்டது.
உரிய சமர்ப்பணங்களை பொலிஸார் மன்றில் சமர்ப்பித்து குறித்த சிசிடிவி காணொளி அறிக்கையை மன்றிற்கு பாரப்படுத்துமாறு நீதிவான் கட்டளை பிறப்பித்துள்ளார்.
எதிர்வரும் நீதிமன்ற தவணைகளில் மத்ரஸா மாணவனின் மர்ம மரணம் தொடர்பில் அழிக்கப்பட்ட சி.சி.ரிவி காணொளிகள் ஆதாரமாக பெறப்பட்டு மரணத்தின்
உண்மை நிலையை நிருபிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.