ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு எந்தவொருநடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை!

0
16

ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு அரசாங்கத்தினால் எந்தவொரு நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
நாட்டில் உள்ள பாடசாலைகளில் 40 ஆயிரம் ஆசிரியர்களுக்கான வெற்றிடம் காணப்படுகிறது. இதனை பிரதமர் ஹரிணி அமரசூரிய நாடாளுமன்றத்திலும் அறிவித்தார்.

ஆயினும் அந்த பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை. பிரச்சினைகள் உள்ளன என மேடைகளில் பேசிக்கொண்டிருப்பது பொருத்தமானது அல்ல. அரசாங்கம் என்ற வகையில் தீர்வுகளை முன்வைக்க வேண்டும்.
அடுத்த வருடம் முதல் தரம் 01 மற்றும் தரம் 06 ஆகியவற்றில் பாடத்திட்டங்களில் மாற்றத்தை ஏற்படுத்தப்போவதாக கல்வி அமைச்சர் என்ற வகையில் பிரதமர் ஹரிணி அமரசூரிய அறிவித்தார்.


எனினும் அவ்வாறான ஏற்பாடுகள் பற்றி ஆசிரியர்களிடம் கலந்துரையாடப்படவில்லை.
உண்மையில் அதிபர், ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினை தீர்க்கப்படாமல் இருக்கிறது. தொழிற்சங்க ரீதியாக பல்வேறு முரண்பாடுகளை தீர்க்க வேண்டியுள்ளது. ஆயினும் பொறுப்புள்ள அரசாங்கம் என்ற வகையில் திட்டங்கள் எதுவும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.