Warning: Array to string conversion in /home/u179857965/domains/eelanadu.lk/public_html/wp-content/plugins/td-composer/legacy/common/wp_booster/td_util.php on line 1711
Warning: Array to string conversion in /home/u179857965/domains/eelanadu.lk/public_html/wp-content/plugins/td-composer/legacy/common/wp_booster/td_util.php on line 1711
Warning: Array to string conversion in /home/u179857965/domains/eelanadu.lk/public_html/wp-content/plugins/td-composer/legacy/common/wp_booster/td_util.php on line 1711
Warning: Array to string conversion in /home/u179857965/domains/eelanadu.lk/public_html/wp-content/plugins/td-composer/legacy/common/wp_booster/td_wp_booster_functions.php on line 675
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பாக இதுவரை தேர்தல்கள் ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்டுள்ள அரசியலமைப்புச் செயற்பாடுகள் மற்றும் வாக்களிப்பு நாள் வரையிலான செயற்பாடுகள் தொடர்பில் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளின் செயலாளர்களுடனான கலந்துரையாடல் இன்று (14) காலை 10.00 மணிக்கு தேர்தல் தலைமைச் செயலகத்தில் நடைபெறவுள்ளது.இதேவேளை, எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குச் சீட்டு அச்சிடுவதற்கான செலவினங்களை ஈடுகட்ட தேவையான பணம் வழங்கப்படும் வரை வாக்குச் சீட்டுகள் அச்சிடப்பட மாட்டாது என அரசாங்க அச்சக அதிகாரி லியனகே தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளார்.தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல். இது தொடர்பான அறிவித்தல் எழுத்துமூலம் நேற்றைய தினம் வழங்கப்பட்டதாக ஜி.புஞ்சிஹேவா குறிப்பிட்டுள்ளார்.இன்று காலை இடம்பெறவுள்ள கலந்துரையாடலில் இது தொடர்பில் விரிவாக கலந்துரையாடவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.