இலங்கையில் 100க்கும் மேற்பட்ட அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு!

0
188

இலங்கையில் 102 வகையான அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சுகாதார அமைச்சின் மூன்றாம் நிலை பராமரிப்பு சேவைகள் பணிப்பாளர் அன்வர் ஹம்தானி இதனை தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து குறித்த மருந்துகளின் விநியோகம் கடுமையான நிர்வாகத்தின் மூலம் செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் மருந்துப் பற்றாக்குறையைத் தீர்க்க சர்வதேச நிறுவனங்கள் உதவி செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.