இஸ்ரேலில் சிக்கியுள்ளவர்களை விமானங்கள் மூலம் மீட்க அவுஸ்திரேலிய அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இஸ்ரேலில் சிக்கியுள்ள அவுஸ்திரேலிய நாட்டை சேர்ந்த சுமார் 1,600 பேர் தாயகம் திரும்ப உதவும்படி, அவுஸ்திரேலிய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அவர்களை மீட்க இரு விமானங்களை அவுஸ்திரேலிய அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ளது.
இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் உள்ள பென் குரியன் விமான நிலையத்தில் இருந்து அந்த விமானங்கள் இயக்கப்படும் என அவுஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.