மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் மற்றும் சிறுநீரக நோயாளிகளின் அடிப்படையில் நலன்புரிப் பலன்களுக்குத் தகுதியான நபர்களின் பட்டியல் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளதாக நலன்புரிப் நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
நாட்டின் சில பகுதிகளில் உள்ள சில பிரதேச செயலகங்கள் மற்றும் கிராம சேவையாளர் அலுவலகங்களில் இது தொடர்பான பட்டியல்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை குறிப்பிட்டுள்ளது.
இன்று முதல் அனைத்து செயலகங்கள் மற்றும் கிராம உத்தியோகத்தர் அலுவலகங்களில் பட்டியல்கள் பகிரங்கப்படுத்தப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதாரம் மற்றும் சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சால் அங்கீகரிக்கப்பட்ட பட்டியல்கள்இ மாற்றுத்திறனாளிகள்இ முதியோர்கள் மற்றும் சிறுநீரகங்களுக்கான வழக்கமான கொடுப்பனவுகள்இ எந்த திருத்தங்களும் இல்லாமல்இ ‘அஸ்வெசுமா’ நலத்திட்ட உதவித் திட்டத்திற்குத் தகுதியானவர்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக சபை தெரிவித்துள்ளது.