கடன் நெருக்கடிக்கு,பரிஸ் கிளப், பூரண ஆதரவை வழங்க உறுதியளிப்பு : அமைச்சர் சேமசிங்க

0
138

கடன் நெருக்கடிக்கு, விரைவில் தீர்வு காணும் இலங்கையின் முயற்சிகளுக்கு, பரிஸ் கிளப், பூரண ஆதரவை வழங்க உறுதியளித்துள்ளதாக, நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். அமெரிக்க வொஷிங்டனில், பாரிஸ் கிளப்பின் இணைத் தலைவர் வில்லியம் ரூஸை சந்தித்த பின்னர், சந்திப்பு தொடர்பில், தனது ருவிட்டர் பதிவில், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தற்போது நடைபெற்று வரும், சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்த மாநாட்டில் பங்குபற்றுவதற்காக, வொஷிங்டன் சென்றுள்ள இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, அங்கு பல்வேறு இராஜதந்திரிகளையும் சந்தித்து, கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளார்.
அதனடிப்படையில், பரிஸ் கிளப் இணை தலைவருடன் இடம்பெற்ற சந்திப்பு தொடர்பில், ருவிட்டரில் பதிவிட்டுள்ள நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, ‘கடன் நெருக்கடிக்கு விரைவில் தீர்வு காண்பதற்கான, இலங்கையின் தற்போதைய முயற்சிகளுக்கு, பரிஸ் கிளப்பின் முழுமையான ஆதரவை, இணை தலைவர் ரூஸ் உறுதியளித்தார். என குறிப்பிட்டுள்ளார்.