களுத்துறையில் சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது

0
120

வடக்கு களுத்துறை பிரதேசத்தில் சட்டவிரோத மதுபான உற்பத்தி பொருட்களுடன் சந்தேக நபர் ஒருவர் வடக்கு களுத்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டவர் பல்பிடகொட பிரதேசத்தை சேர்ந்த 42 வயதுடையவராவார்.

வடக்கு களுத்துறை பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சோதனையில் சட்டவிரோத மதுபான உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்ட 1800 லீற்றர் கோடா , 50 லீற்றர் சட்டவிரோத மதுபானம் , 4 எரிவாயு சிலிண்டர் மற்றும் 2 எரிவாயு அடுப்புகள் ஆகியன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வடக்கு களுத்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.