கொழும்பில் நிர்மாணிக்கப்பட்டுவரும் வணிக வலயத்திற்கு திலும் அமுனுகம விஜயம்

0
68

கொழும்பு துறைமுக நகரில் நிர்மானிக்கப்பட்டுவரும் வரியற்ற வணிக வலயத்திற்கு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டார். நகர செயற்திட்டத்தில் திறக்கப்படவுள்ள வரியற்ற வணிகம் உள்ளடக்கிய முனையத்தின் நிர்மாணப் பணிகள் தற்போது இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளன.

முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம இன்று குறித்த வலயத்தை கண்காணிப்பதற்கான விஜயத்தை மேற்கொண்டிருந்தார். இதன் போது அங்கு காணப்பட்ட பிரச்சிளைகள் மற்றும் குறைபாடுகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.இந்நிலையில் இராஜாங்க அமைச்சர் குறைபாடுகள் தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இந்த வலயம்திறக்கப்பட்டமையை தொடர்ந்து விமான நிலையத்தில் பொருட்கள் வாங்காதவர்களுக்கு அவர்களின் கடவுச்சீட்டிற்கு அமைய குறித்த வலயத்தில் பொருட்களை கொள்வளவு செய்யும் வாய்ப்பு கிடைக்கப்பெறுகின்றமை விசேட அம்சமாகும்.