கொழும்பு துறைமுகத்தில் சரக்கு கப்பல் தீ விபத்து

0
78

கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டிருந்த சரக்கு கப்பலில் இன்று அதிகாலை தீ பரவல் மற்றும் வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கை துறைமுக அதிகார சபையின் சிரேஸ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

துறைமுக தீயணைப்புப் பிரிவு உட்பட துறைமுக ஊழியர்கள் தீயை அணைத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். இத்தீயை அணைக்காமல் இருந்திருந்தால் பாரிய அழிவு ஏற்பட்டிருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும், தீயினால் கப்பலுக்கு ஏற்பட்ட சேதம் தொடர்பில் மதிப்பிடப்படவில்லை எனவும், தீ விபத்தினால் பொருட்கள் மற்றும் கப்பலுக்கு அதிக சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் மேலும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.