யாழ்ப்பாணம், வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிமரத்தால் கதிர்காம பாத யாத்திரை குழுவினருக்கு உதவிப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
பாரம்பரியமாக சந்நிதி முருகன் ஆலயத்திலிருந்து கதிர்காம கந்தன் ஆலயம் வரை பாதயாத்திரை செல்லும் யாத்திரிகர்களுக்கு, திருகோணமலை குச்சவெளி கிராமத்தில் அமைந்துள்ள தான்தோன்றி சித்தி விநாயகர் ஆலயத்தில் வைத்து மருத்துவப் பொருள்கள் வழங்கி வைக்கப்பட்டன.

ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் தொண்டர்களுடன் சென்று குறித்த உதவிகளை வழங்கி வைத்தார்.அதனை தொடர்ந்து திருகோணமலை கப்பல்துறை சரஸ்வதி வித்தியாலயத்திற்கு பாதுகாப்பு வேலி அமைப்பதற்காக 2 இலட்சம் ரூபா நிதி உதவி, பாடசாலை முதல்வரிடம் வழங்கி வைக்கப்பட்டது.
