28.5 C
Colombo
Saturday, September 21, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

ஜப்பானியத் தூதுவர் ஜனாதிபதியை சந்தித்தார்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிடேகிக்கும் (Mizukoshi Hideaki) இடையிலான சந்திப்பு ஒன்று, ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (24) முற்பகல் இடம்பெற்றது.

ஜப்பானியப் பேரரசர் ஹிரோனோமியா நரஹிட்டோவின் (Hironomia Narahito) வாழ்த்துகளை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு தெரிவித்த ஜப்பானியத் தூதுவர், ஜனாதிபதியுடன் சிநேகபூர்வ உரையாடலில் ஈடுபட்டார்.

முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன, சென்பிரான்சிஸ்கோ சமாதான மாநாட்டில் உரையாற்றி, 70 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு ஜப்பான் தூதரகமும் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள விசேட நிகழ்ச்சி, செப்டெம்பர் மாதம் 6 ஆம் திகதி நடைபெறவுள்ளதுடன் அது தொடர்பாகவும் குறித்த சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles