முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி துப்பாக்கி பிரயோகத்திலிருந்து உயிர்தப்பியமை குறித்து நிம்மதியடைந்துள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் அன்டனி அல்பெனிஸ் தெரிவித்துள்ளார்.
இது மன்னிக்க முடியாத தாக்குதல் என அவுஸ்திரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார்.ஜனநாயக செயற்பாடுகளில் வன்முறைக்கு இடமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். காசா யுத்தம் தொடர்பில் அவுஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் அலுவலகங்களிற்கு வெளியே ஆர்ப்பாட்டங்கள் அதிகரிப்பதையும் டிரம்ப்மீதான தாக்குதலையும் தொடர்புபடுத்தி கருத்து வெளியிட்டுள்ள அவுஸ்திரேலிய பிரதமர் இவ்வாறான சம்பவங்கள் அதிகரிக்கலாம் இதன் காரணமாகவே இவ்வாறான சம்பவங்களை எந்த தயக்கமும் இன்றி எதிர்க்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் வன்முறைகள் அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கரிசனை வெளியிட்டுள்ள அவுஸ்திரேலிய பிரதமர் நாங்கள் விவாதத்தின் உணர்ச்சியின் அளவை குறைக்கவேண்டும்,சொல்லாட்சியை அதிகரிப்பதன் மூலம் எந்த பயனும்கிட்டப்போவதில்லை என குறிப்பிட்டுள்ளார்.