திருகோணமலை- ஈச்சிலம்பற்றில் விபத்து: கடற்படை வீரர் பலி

0
57

திருகோணமலை -ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள மாவடிச்சேனைப் பகுதியில், கடற்படைக்குச் சொந்தமான வாகனமொன்று விபத்தில் சிக்கியதில், கடற்படை
வீரரொருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று இரவு இவ் விபத்துச் சம்பவித்துள்ளது. சிறிய ரக லொறியொன்றும் கடற்படையின் வாகனமும் நேருக்கு நேர் மோதியுள்ளன. சம்பூர் கடற்படை முகாமில் கடமை புரிந்த 49 வயதுடைய கடற்படை வீரரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த கடற்படை வீரரின் சடலம் ஈச்சிலம்பற்று பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஈச்சிலம்பற்று பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.